29 Feb 2012

இயற்கை அழகு குறிப்புகள்


 
* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம். 
 
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
 
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
 
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
 
* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.
 
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.
 
* தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.
 
* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.

28 Feb 2012

ஆரஞ்சு மகிமை


ஆரஞ்சு மகிமை

 
எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு. சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
 
இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.
 
இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு.
 
ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
 
ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...

உடல் வலிகளும் காரணங்களும் - அறிய வேண்டிய மருத்துவம்!




எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம், வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.
1. மிகமோசமான தலைவலி
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.
2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்
 
பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம்.
 
அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.
 
3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி
 
அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.
 
4. கடுமையான வயிற்று வலி
 
வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.
 
5. கெண்டைக்கால் வலி
 
கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
 
6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி
 
கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.
 
7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி
 
சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.
 
சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.
 
8. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி
 
வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது. இதனால் முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால் மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம் மரத்தும் போகிறது.
 
இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவே நியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு.காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அவஸ்தைகள் அதிகரிக்கும்.இது தங்களது சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும் தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).
 
நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும் குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறது என்று அர்த்தம்.இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாக உணர்கிறீர்கள். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின்மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. களிம்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குத்தான் லாபம்.
 
9. காரணம் அறிதல்
 
பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப்பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால் வந்த வலியா என்பதைப் பெரும்பாலும் கண்டு பிடித்துவிட முடியும்.
 
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம
 
ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை 'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.
 
ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்தது போல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்க முடியும்.வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகிவிடும்.
 
10. சிறப்பு சிகிட்சை
 
மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான் செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.
 
ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டு வடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.
 
ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்வது அவசியமாகிறது.நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி.
 

25 Feb 2012

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணங்கள்


தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணங்கள்

 
இதோட தாவரவியல் பேரு, மிமோசா புடிகா. இது இந்தியாவில் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள்ல காணப்படுது. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதோட சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம்.
 
இதைத் தொட்டால் அவை மூடிக் கொள்ளும். அதனால் தான் இதுக்கு `தொட்டாற்சிணுங்கி'ன்னு பேரு வந்துடுச்சு. இதோட மலர்கள் பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கனிகள் தட்டையாக இருக்கும். இதோட இலைகள் மற்றும் வேர் மருந்தாகப் பயன்படுது.
 
இலைகளின் சாறு சைனஸ், மூல நோய், காயங்களுக்கு மருந்தாகுது. இதோட வேர் சிறுநீரக கோளாறுகளைப் போக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுது. இதில் இருந்து நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுது.

உங்கள் பொன்னான பாதம் புண்ணாகலாமா?


உங்கள் பொன்னான பாதம் புண்ணாகலாமா?

 
சிலருக்கு, என்னதான் சிகிச்சை பெற்றாலும் பாத வெடிப்பு சட்டென்று குணமாகாது. அப்படிப்பட்டவர்களுக்கு சில டிப்ஸ்...
 
* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
 
* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
 
* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
 
* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
 
* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
 
* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.
 
* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும். * இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
 
* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்

24 Feb 2012

தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாடும் முக்கியத்துவமும் - அறியவேண்டிய மருத்துவம்.



மனித உடலிலே பல வகையான அகஞ்சுரக்கும் சுரப்பிகள் காணப்பகின்றன. இவை பல்வேஷபட்ட ஓமோன்களைச் சுரக்கின்றன. இந்த ஓமோன்கள் உடலியல் தொழிற்பாடுகளிற்கு மிககவும் இன்றியமையாதவையகும். இந்தவகையில் தைரோயிட் சுரப்பியானது தைரொக்சின் என்ற ஓமோனைச் சுரக்கின்றது. ,ச்சுரப்பியானது கழுத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது.

தைரொயிட் சுரப்பியில் எவ்வாறான நோய்கள் ஏற்படலாம்?.
  1. தைரொயிட் சுரப்பியால் சுரக்கப்படுகின்ற தைரொக்சின் ஓமோனின் அளவு அதிகரிக்கலாம். இது HYPERTHYROIDISM என அழைக்கப்படும்.
  2. சுரக்கப்படுகின்ற தைரொக்சின் ஓமோனின் அளவு குறைவடையலாம். இது HYPOTHYROIDISM என அழைக்கப்படும்.
  3. தைரொயிட் சுரப்பியில் கட்டிகள் ஏற்படலாம். இவை தைரொயிட் கட்டிகள் THYROID NODULES என அழைக்கப்படும்.
  4. மேற் கூறப்பட்ட கட்டிகளில் சில மற்றைய பகுதிகளுக்குப் பரவும். புற்றுநோயினை ஒத்திருக்கும். இவை தைரோயிட் புற்றுநோய் THYROID CANCER என அழைக்கப்படும்.
 
மேற் கூறப்பட்ட நோய் வடிவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமான நோய்க் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.
 
உடற் தொழிற்பாடு:
 
தைரொயிட் சுரப்பியால் தைரொக்சின் ஓமோன் சுரகக்ப்படுகின்றது. பல் வேறு நோய் நிலைகள் தைரொயிட் சுரப்பியில் ஏற்படலாம். இவற்றின் போது எவ்வாறான பரிசோதனைகளைச் செய்யலாம் என்பலதயும் அவற்றின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் ஆராய்தல் அவசியமானதாகும். இதற்கு முன் தைரொக்சின் ஓமோன் எவ்வாறு சுரக்கப்படுகின்றதென்று அறிந்திருப்பது முக்கியமானதாகும்.
 
தைரொக்சின் எவ்வாறு சுரக்கப்படுகின்றது:
 
  1. காச்சுரப்பியிலிருந்து ( Pituitary gland)  T S H என்ற ஒரு துண்டல் ஓமோன் சுரக்கப்படுகின்றது.  இது தைரொயிட் சுரப்பியினை தூண்டுவதாலேயே தைரொக்சின்  (thyroxine) சுரக்கப்படுகின்றது.
  2. கபச்சுரப்பி ---TSH ----–தைரொயிட் சுரப்பி ----தைரொக்சின்
  3. தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்தால் அது கபச்சுரப்பியில் இருந்து வெளிப்படுகின்ற TSH இன் அளவினை குடைவடையச் செய்கின்றது. அதாவது TSH  வெளியேற்றத்தை  /சுரத்தலை எதிர்க்கிறது. இதனால் TSH இன் அளவு குறைவடைகின்றது இதனாலேயே பெரும்பாலான Hyperthyroidism  நோயாளிகளின் பரிசோதனை முடிவில் தைரொக்சின் அளவு அதிகரித்தும் , TSH  இன் அளவு குறைவடைந்தும் காணப்படும்.
  4. தைரொக்சின் அளவு குருதியில் குறைவடையுமாயின் அதாவத Hypothroidism உள்ளவர்களில் இந்த எதிர்த்தலின் (Negative feed bavk)  அளவு குறைவடைவதால் கபச்சுரப்பியினால் சுரக்கப்படுகின்ற TSH இன் அளவு அதிகரிக்கும்.  இதனாலேயே Hypothyroidism  நோயாளியின் குருதிப்பரிசோதனை முடிவுகளை அவதானிப்பீர்களாக இருந்தால் தைரொக்சின் அளவு குறைவாகவும் ,TSH  அளவு அதிகரித்தும் காணப்படும் (Autontebodies) சுரப்பியினைத் தாக்குவதால் சுரப்பியிலிருநுது வெளியேறுகின்ற ஓமோனின் அளவு கூடலாம். அல்லது குறைவடையலாம். எனவே குருதியில்  Autoantibodies  இனைப் பார்த்தல் /அளத்தல். கொள்ளுதல் சில தைரொயிட் நோய்களை கண்டறிய உதவும்.
தைரொக்சின் ஓமோனின் தொழிற்பாட்டிற்கு ‘அயடின் ‘ என்கின்ற கனியுப்பு அத்தியவசியமாகும். இதனாலேயே அயடீன் உட்கொள்ளும் அளவு குறைவானவர்களில் Hypothyrodism  அதாவது குருதியில் தைரொக்சின் அளவு குறைவடைந்து தைரொயிட் சுரப்பி வீக்கமடைகின்றது.
 
இதனாலேயே பாவனையிலுள்ள உப்பு அயடின் கலந்த உப்பாக காணப்படுகின்றது. இதன் மூலம் தைரொயிட் நோய்களின் அளவு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. அயடீன் கலந்த உப்பினை நீரில் கழுவாமல் நேரடியாக உணவிற்குள் சேர்க்கவேண்டும். ஏனெனில் உப்பினைக் கழுவுவதனால் அத்துடன் காணப்படும் அயடீன் வெளியேற்றப்படுகின்றது.
 
--- kingdomofklk ---

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்...


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்...

 
கர்ப்பகாலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் பரிசோதித்து, கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற வேண்டும். அதுதான் தாய்க்கும், குறிப்பாக குழந்தைக்கும் நல்லது. "கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, முதலில் `குளுகோஸ் சேலஞ்ச் டெஸ்ட்' (ஜி.சி.டி) எடுக்கவேண்டும். ஐம்பது கிராம் குளுகோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிட வேண்டும்.
 
அதில் 140 மில்லி கிராம் என்ற அளவிற்கும் அதிகமாக இருந்தால் `டயோக்னஸ்டிக் டெஸ்ட்' எனப்படும் `குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' (ஜி.டி.டி) செய்து பார்க்க வேண்டும். இந்த பரிசோதனையை வெறும் வயிற்றில் மேற்கொள்ள வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவினை கணக்கிட்டு விட்டு, 100 கிராம் குளுகோஸ் சாப்பிட வேண்டும்.
 
பின்பு ஒவ்வொரு மணி நேரம் இடைவெளி விட்டு மூன்று முறை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை அளவிடுவார்கள். கண்டுபிடிக்கப்படும் சர்க்கரையின் அளவிற்கு தக்கபடி சிகிச்சை வழங்கப்படும். சிலருக்கு பாரம்பரிய ரீதியாக சர்க்கரை நோய் இருக்கும். சிலர் முந்தைய கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
 
அதிக எடை கொண்டவர்கள், அதிக எடைகொண்ட குழந்தையை பிரசவித்தவர்கள், அடிக்கடி கர்ப்ப சிதைவுக்கு உள்ளானவர்கள் ஆகியோர் கர்ப்பமான தொடக்கத்திலே சர்க்கரை நோய் பரிசோதனைக்கு தயாராக வேண்டும். முறையான உணவு பழக்கம் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். முடியாவிட்டால், இன்சுலின் ஊசி போட வேண்டியதிருக்கும்.
 
இந்த ஊசி சிகிச்சையை தொடங்கும் சில நாட்கள் கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியதிருக்கும். அங்கு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு, அது ரத்த சர்க்கரையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று ஆராய்வார்கள். பின்பு அவர்கள் வீடு திரும்பி, வீட்டில் இருந்தபடியே ஊசி போட்டுக் கொள்ளலாம்.
 
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவை வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்கும் என்பதால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை."தாயின் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், வயிற்றுக் குழந்தையின் உடலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும். அதுவே குழந்தையின் உடல் வேகமாக வளருவதற்கும், எடை அதிகரிப்பதற்கும் காரணமாகிறது.
 
நிறை மாத காலத்தில் குழந்தையின் உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறையவும் செய்யும். அதனால் குழந்தை மரணமடையக் கூட செய்யலாம். அதனால் கர்ப்பிணிகள் சர்க்கரை நோயை மிக கவனமாக கையாள வேண்டும். கண்டறிந்து, முழுமையான சிகிச்சையும் பெற வேண்டும். பிரசவத்திற்குப் பிறகும் தாய் மற்றும் குழந்தையின் ரத்தத்தை பரிசோதித்து, சர்க்கரை இருந்தால் அதற்கு தக்கபடியான சிகிச்சையை பெறவேண்டும்..
 
இந்தியா தற்போது, `உலக சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்' என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோயாளிகளின் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. சர்க்கரை நோயில் ஆண், பெண் என்ற பேதமில்லை. கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், மனைவிக்கு இருந்தாலும் அது அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையையும், இனப்பெருக்க திறனையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஓய்வு, மனமகிழ்ச்சி மூலம் சர்க்கரை நோய் வராத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். வந்து விட்டால் அலட்சியப்படுத்தாமல் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
 
- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

தாய்பால் சுரக்க பூண்டு சாப்பிடுங்க


தாய்பால் சுரக்க பூண்டு சாப்பிடுங்க

 
கைவைத்தியத்துக்கு மிகவும் சிறந்தது பூண்டு. பூண்டின் மருத்துவக் குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்.
 
பிரசவம் ஆனா  பெண்களுக்கு பொதுவாக குழ‌ந்தை பெ‌ற்ற  பெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக சேர்த்துக் கொள்ள வே‌ண்டு‌ம்.
 
அதனால்  தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள். பால் அதிகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு. எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மஞ்சள் காமாலையை தடுக்க வழி


மஞ்சள் காமாலையை தடுக்க வழி

 
காமாலை  என்பது நோயே அல்ல, உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்ககள் அனை வருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. `புளோரசன்ட்' விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும்.
 
கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும் போதும் தோலின் மேல் கெரோட்டின் படிந்து சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும் தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. தோலில் படிந்து கறை ஏற்படும் போது தான் அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும்.
 
ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, `பிலுருபின்' என்ற நிறமும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறத்தின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும் போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல் அதிக வேலைப்பளுவால் திணறும்.
 
அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமாக சில நோய்கள், மலேரியா, சிலமருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள `அப்போடாக்சன்' என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும்.
 
சில நேரங்களில் கல்லீரலே பாதிப்படைந்து அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்களை போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போவது. தாய்க்கும், குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்து போகாமல் இருத்தல் ஆகியவற்றால் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும் இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.
 
ஹெப்பாடைட்டிஸ் ஏ,பி,சி,டி,இ, ஹெர்பர், லெப்போ பைரேசிஸ், சைம்போமெகா வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும்.
 
கல்லீரல் நாளங்களில் கல், புற்று நோய் அடைப்பு உருவாகி தடை ஏற்படும் போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால் போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைப்பட்டு விடும். இதனால் பிரச்சினை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது.
 
ரத்தம் மற்றும் சிறுநீரை அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும், இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். நோய்க்கான காரணத்தை கண்டு பிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம்  என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
 
அறிகுறிகள்.......
 
 
மஞ்சள் காமாலை ஆபத்தான நோய்.கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது."கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ'' என்ற வைரசே கல்லீரலை  தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.
 
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
 
கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையான குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும்.
 
உணவுமுறை.......
 
கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணைய், நெய், எண்ணைய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பெண்கள் முறையாக பரிசோதனை செய்து தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும்.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு........
 
கர்ப்பமுற்றிருக்கும் போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. ஹெபடிடிஸ் ஜி.பி. என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. 
 
நம் நாட்டில் 3.20 சதவீதம் வரை மஞ்சள் காமாலை நோயால் கர்ப்பமுற்ற பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஹெபடிடிஸ் இ வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களில் 10.20 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது எவ்வாறு கர்ப்பிணிப் பெண்களை நோய் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றவர்களுக்கு இந்த நோய் தொற் றாமல் தடுத்துவிடும். அவர்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவு களைக்கொடுத்து பராமரிக்க வேண்டும். அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி மற்றும் இம்முனோகுளோபுலின் கொடுக்கப்பட வேண்டும்.
 
பாதுகாப்பு முறை.......
 
மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேவண்டும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
 
சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி பிறகு குடிக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மூலிகை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்என்கிறார்சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர்  டாக்டர் திருத்தணிகாசலம்.