24 Feb 2012

தாய்பால் சுரக்க பூண்டு சாப்பிடுங்க


தாய்பால் சுரக்க பூண்டு சாப்பிடுங்க

 
கைவைத்தியத்துக்கு மிகவும் சிறந்தது பூண்டு. பூண்டின் மருத்துவக் குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்.
 
பிரசவம் ஆனா  பெண்களுக்கு பொதுவாக குழ‌ந்தை பெ‌ற்ற  பெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக சேர்த்துக் கொள்ள வே‌ண்டு‌ம்.
 
அதனால்  தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள். பால் அதிகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு. எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

0 comments:

Post a Comment